Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தோனேசியக் கப்பலுடனான தொடர்பு துண்டிப்பு
243 பேருடன் சென்ற இந்தோனேசியப் படகு ஜாவா கடலில் மாயமான நிலையில் 103 பேர் மீட்கப்பட்டனர். ஜாவாவிலிருந்து போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் பகுதிக்கு 240 பயணிகளுடன் பயணித்த விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 ((Virgo Transport 8)) என்ற கப்பல், பன்ஜார்மாசின் துறைமுகப் பகுதியில் இருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது மோசமான வானிலையால் மாயமானது.
சவுதி ராணுவ தளம் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
சவுதி ராணுவ தளம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை வெளியிட்ட தகவலில்.

சவுதி அரேபியாவின் ஷரூரா ராணுவ தளத்தில் அமைந்துள்ள கட்டளை மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு - 30 பேர் மாயம்
பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ((Vanuatu))படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மாயமான 30 மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சான்டோ ((Santo))தீவிலிருந்து அம்பே ((Ambae)) தீவுக்கு 45-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற 'எம்வி மடுய்' ((MV Matui)) என்ற படகு மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதாகவும்,15 பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved