Also Watch
Read this
By: Web Team

மனித குலம் எதிர்கொள்ளும் மிக ஆபத்தான சவால்களில் பயங்கரவாதம் ஒன்று என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் பிரிக்ஸ் அமைப்பின் 17 ஆவது உச்சி மாநாட்டில் இதை தெரிவித்த அவர், சமீபத்தில் இந்தியா பஹல்காமில் மிகவும் மனிதாபிமானமற்ற, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது என்றார்.
பஹல்காம் பயங்கரவாதம் என்பது ஒட்டு மொத்த மனித குலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என மோடி கண்டனம் தெரிவித்தார்.
அமைதி, பாதுகாப்பு, உலகளாவிய ஆட்சியில் சீர்திருத்தம் ஆகிய தலைப்புகளில் நடந்த பிரிக்ஸ் அமர்வில் பேசிய மோடி, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved