Also Watch
Read this
By: Manigandan Raja

முதல்முறையாக ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவு
ஈரானுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ட்ரம்ப் முதன்முறையாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடற்படை முற்றுகை முழு வீச்சில் அமலிலும் உள்ளதாகவும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு இயங்கி வருவதாகும் தெரிவித்துள்ளார். கடலில் அனைத்து கன்னிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை அச்சுறுத்தல்: மக்களுக்கு UAE எச்சரிக்கை
ஈரான் மூலம் ஏவுகணை அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஈரானில் இருந்து தங்களை நோக்கி ஏவப்பட்ட 2 பாலிடிக்ஸ் ஏவுகணைகளை கண்டறிந்ததாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரசு அமீரகத்தின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு
பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியது தொடர்பான ஐக்கிய அரபு அமீரகத்தின் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. தங்களை நோக்கி ஈரான் 2 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதாகவும், அதில் ஒன்று கடலுக்குள் விழுந்ததாகவும், மற்றொரு கடற்கரை பகுதியில் விழுந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved