கேரளாவின் ஆழப்புழாவில் நடந்த சாம்பியன்ஸ் படகு போட்டியின் லீக் சுற்றில் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர். சாம்பியன்ஸ் படகு போட்டியானது ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 12 போட்டிகள் கொண்ட லீக் சுற்றாகும். இந்த வருட போட்டியின் லீக் சுற்றுகள் கொச்சியில் நடந்து முடிந்த நிலையில் ஆலப்புழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லீக் சுற்றில் அடுத்த பகுதிகள் திருச்சூர், கோட்டையம், கொல்லம் போன்ற இடங்களில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. போட்டியின் இறுதியில் முதல் பரிசை தட்டிச் செல்லும் படகிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்தியா
00 Comments
Leave a comment