Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க வேண்டும் :
ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க விரும்பும் சரக்கு கப்பல்கள் ஈரானின் அனுமதி பெற்றே பயணிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் அவை தாக்கப்படும் எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் கடற்படை பிரிவு தெரிவித்துள்ளது.
இதை தெரிவித்த கடற்படை மூத்த அதிகாரி அலிரேசா தாங்ஸ்ரீ ((Alireza Tangsiri)) இப்படி ஈரானின் அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில் வந்த இரண்டு கப்பல்கள் நேற்று தாக்கப்பட்டதாக கூறினார். ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு தவிர்த்த இதர கப்பல்கள் இந்த நீரிணையில் பாதுகாப்பாக பயணிக்கலாம் எனவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved