Also Watch
Read this
By: Manigandan Raja

தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால் :
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா/27, வழக்கறிஞராக உள்ளார். அசோக்நகரில் உள்ள மனோஜ் பவன் ஹோட்டல் தயிர் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
அதில் கரப்பான் பூச்சியின் கால் ஒன்று இருப்பதை பார்த்து அது குறித்து மேலாளரிடம் கேட்ட போது முறையாக பதில் அளிக்காமல் அந்த உணவை அப்புறப்படுத்திய பின் வேறு உணவை கொடுத்துள்ளார். அதற்கான பணத்தையு ம் அவர் செலுத்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், வாந்தி எடுத்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாலை சோதனையில் ஈடுப்பட்ட போது அந்த உணவை குப்பையில் அவர்கள் வீசியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் உணவு வெளியில் இருந்து சமைத்து கொண்டு வரப்படுவதாகவும் அதில் ஏதேனும் தவறு நடந்து இருக்கும் மன்னித்து கொள்ளுங்கள் என வாடிக்கையாளரிடம் மேலாளர் மன்னிப்புக்கோரினார்.
தொடர்ச்சியாக உணவகத்தை ஆய்வு செய்து தூய்மையாக வைத்து இல்லாததிற்கு 2ஆயிரம் ரூபாயும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 3 ஆயிரம் என 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தங்களது தவறை ஒத்துக்கொள்ளாமல் வாடிக்கையாளர்களை ஏளனமாக பேசி அவமானம் செய்ததாகவும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved