Also Watch
Read this
By: Manigandan Raja

அப்பளம்போல் நொறுங்கிய கார் :
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டைனர் லாரி மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது, இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் சுந்தர்,. இவர் இன்று காலை தனது குடும்பத்தினருடன் மதுரையில் இருந்து அரியமான் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
மீண்டும் மதுரைக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அடுத்த திணைக்குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டுனர் ராபின், சுந்தர் அவரது மனைவி சபர்ணா உட்பட நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved