Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய கைத்தறி துறைக்கு ஆதரவு அளிக்க வேண்டுகோள்
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்திய கைத்தறி துறைக்கு ஆதரவு அளிக்க அனைவரும் குறைந்தது ஒரு கைத்தறி பொருளையாவது வாங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அந்த கைத்தறி பொருளுடன் ஒரு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மற்றவர்களையும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்க ஊக்குவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இது இந்தியாவின் பாரம்பரிய நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் முயற்சி என்றும் பிரதமர் ரீல்ஸ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு?
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கூறும் கோரிக்கைகளை மத்திய அரசு, ஜார்கண்ட் அரசு உள்ளிட்ட அனைத்து அரசுகளும் கேட்டு, கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். மாணவர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா - இஸ்ரேல் இடையேயான நட்புறவு மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved