news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

என்ன நடந்தது?

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சரும் கணவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா. மனுவை வாபஸ் பெற்றதால் வழக்கை முடித்து வைத்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து வழக்கு
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்க்கு கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். முதலமைச்சர் விஜய் மனைவி சங்​கீ​தா, கடந்த 2025 டிசம்​பர் 24ஆம் தேதி செங்​கல்​பட்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், தமக்கு விவாகரத்து வழங்​க​வும், நிரந்தர ஜீவ​னாம்​சம் வழங்​க​வும் கோரி​யிருந்​தார்.

வழக்கு விசாரணை
இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26ஆம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்கை செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றி நீதி​மன்​றம் உத்​தர​ விட்​டது. தொடர்ந்​து, கடந்த ஏப்​ரல் 20ஆம் தேதி விசா​ரணைக்கு வந்த இந்த வழக்கு மேலும் ஒத்​தி வைக்​கப்​பட்​டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15ல் விசாரணைக்கு வந்தது.

காணொலி வாயிலாக...
அப்போது, வழக்​கில் நேரில் ஆஜராவ​தில் இருந்து விலக்கு அளித்​து, வீடியோ கான்​பரன்ஸ் மூலம் ஆஜராக அனு​மதி வழங்க வேண்​டும் என விஜய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனுவை, நீதி​மன்​றம் ஏற்​றுக் கொண்டு அனு​மதி வழங்​கியது. இதனையடுத்து இந்த வழக்​கின் வி​சா​ரணை ஆகஸ்ட் 7ஆம்​ தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

இன்று விசாரணை
முதல்​வரும், தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் - அவரது மனைவி சங்​கீதா இடையி​லான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுஜாதா முன்பு இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. வழக்கு விசாரணையின்போது காணொலி மூலம் ஆஜராகி, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சங்கீதா தெரிவித்தார்.

வழக்கு முடித்து வைப்பு
விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால், வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். வாபஸ் பெறுவதற்கு முதல்வர் விஜய் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், நீதிபதி சுஜாதா, ‘எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம்’ என அனுமதியளித்து, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved