Also Watch
Read this
By: Manigandan Raja

அசாம் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 99 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிழந்தோரின் எண்ணிக்கை 99ஐ தொட்டுள்ளது. வெள்ள பாதிப்பில் சிக்கி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும், தங்களுக்கு தனி நாடு வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பணவீக்கம், தொடர் மின்வெட்டு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உயிரிழந்த நிலையில் 5 வயது பெண் புலி உடல் கண்டெடுப்பு
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசியப் பூங்காவில், 5 வயது பெண் புலி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு கடி அல்லது தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சரியான காரணம் உறுதி செய்யப்படும் என வனத்துறை கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved