Also Watch
Read this
By: Manigandan Raja

சிவபெருமான் வழிபாட்டுக்கு உகந்த ஷ்ரவன் ஹோலி மாதம்
சிவபெருமான் வழிபாட்டுக்கு உகந்த ஷ்ரவன்((Shravan)) ஹோலி மாதம் வட இந்தியாவில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஒடீசா மாநிலம் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக் சிவன் வடிவிலான மணற்சிற்பத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
சிற்பத்தின் முன்பு ஓம் நமச்சிவாய எனும் எழுத்துக்களை பொறித்துள்ள நிலையில், சிற்பத்தை காண மக்கள் குவிந்து வருகின்றனர்.
ஷ்ரவன் ஹோலி மாதத்தின் இரண்டாவது திங்கள்
ஷ்ரவன் ஹோலி மாதத்தின் இரண்டாவது திங்களை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாப்பூரில் ((Sitapur)) உள்ள ஷியாம் நாத் சிவன் கோயிலில் நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஓவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் ஹோலி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

தனியார் இரும்பு தொழிற்சாலையில் விபத்து
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் கொதிகலன் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடிவிபத்தில் காரணமாக கொதிகலன் உலோகம் உருகி சிதறி தொழிலாளர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. விபத்தில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved