Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு புதிய அவதாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், வர்ணனையாளராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தியா - இலங்கை மோதும் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 28-ம் தேதியும் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் வர்ணனையாளராக ரஹானே சேர்ந்துள்ளார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் அணி வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வென்றது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 57 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஜெகதீசன் 78 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved