Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் அடுத்த கல்பட்டு ஏரியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு மீன்பிடி திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர். மீன்பிடி திருவிழாவையொட்டி ஏரியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இறங்கி, போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் சிக்கின. குறிப்பாக பெரிய அளவிலான மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆர்வத்துடன் மீன்பிடித்த பொதுமக்கள், பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இதனால் கல்பட்டு ஏரி பகுதி முழுவதும் திருவிழா போல் களைகட்டியது. மேலும், ஏரியில் அதிகளவில் காணப்பட்ட ‘டேங்க் கிளீனர்’ எனப்படும் மீன்களை மட்டும் பொதுமக்கள் பிடித்து, அவற்றை ஏரியின் அருகாமையில் வீசி விட்டுச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved