Also Watch
Read this
By: Fyrose Banu

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 80 நிமிடங்கள் கையில் தேசியக்கொடியுடன் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவ - மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுந்தரி சாலையில் உள்ள மின்னொளி செயற்கைப்புல் மைதான திடலில் கோவில்பட்டி ஸ்கை ஹைய் (Sky High) ஸ்போர்ட்ஸ் அகாடெமி 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் 80 நிமிடங்கள் இடைவிடாது ஸ்கேட்டிங் செய்யும் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் கையில் தேசியக் கொடியுடன் 80நிமிடங்கள் இடைவிடாது ஸகேட்டிங் செய்து அசத்தியது மட்டுமின்றி குளோபல் டேலண்ட் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் , எலைட் லெஜெண்ட்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகிய மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

தொடர்ந்து ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா கால்பந்து வீரர் பாண்டி செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கி
பாராட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved