news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

சென்னையில் நவம்பரில் WTA 250 மகளிர் டென்னிஸ் தொடர்

சந்தீப் நந்தூரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், தமிழ்நாடு விளையாட்டுத்துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

வரும் நவம்பர் 2 முதல் 8 ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை இன்று நடைபெற்றது.

முன்னதாக இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை செயலர் சந்தீப் நந்தூரி பேசுகையில்,

முதலமைச்சர் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து, இந்த நிகழ்வுக்கு ஆதரவாக அதே நாளில் 10 கோடி ரூபாயை அறிவித்தார். விளையாட்டுத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ள இந்த ஆதரவை வழங்கியதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

நமது விளையாட்டுத்துறை அமைச்சரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவரும் ஒரு விளையாட்டு வீரர். 2036 ஆம் ஆண்டுக்குள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், விளையாட்டை மேம்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிப்பது குறித்தும் அவர் 24 மணி நேரமும் சிந்தித்து வருகிறார்.

நமது விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அவர்களின் முயற்சியால், வரும் மாதங்களில் இந்த விளையாட்டு நிகழ்வை நம்மால் நடத்த முடிகிறது. டென்னிஸ் விளையாட்டைப் பற்றி நான் அதிகம் பேச வேண்டியதில்லை. விஜய் அமிர்தராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் போன்ற ஜாம்பவான்கள் நம்மிடம் உள்ளனர்.


அவர்களைப் பார்த்து உந்துதல் பெற்று, இந்த விளையாட்டைத் தொடரும் பல வீரர்கள் நம்மிடம் உள்ளனர். இந்த அரங்கத்தில் நமது சிறந்த விளையாட்டு விடுதி மாணவர்கள் அமர்ந்துள்ளனர். தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல பதக்கங்களை வென்றுள்ள அவர்களுக்கு, சர்வதேச அளவில் சிறந்த பயிற்சியாளர்கள் வழிகாட்டி பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பை பத்திரிகையாளர்களும், இங்குள்ள நண்பர்களும் கவனித்திருப்பீர்கள். தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்களை அமைக்க உள்ளது.

முதலில், நம்மிடம் சிறந்த விளையாட்டு விடுதிகள் உள்ளன. அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த வீரர்கள் அடுத்த கட்டமாக இந்த ஒலிம்பிக் சிறப்பு மையங்களுக்கு வருவார்கள்.
ஒவ்வொரு ஒலிம்பிக் மையமும் அனைத்து விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தாமல், வெவ்வேறு இடங்களில் ஓரிரு ஒலிம்பிக் விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும்.

சர்வதேச மற்றும் நிபுணத்துவப் பயிற்சியாளர்கள் இந்த மையங்களுக்குத் தலைமை தாங்கி, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்த மாணவர்களை உருவாக்குவார்கள்.
இதுதான் எங்கள் திட்டம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. மையங்கள் அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இன்னும் ஒரு வருடத்தில், மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில் பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் நடைபெறும். நமது இளம் திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, சர்வதேச தொடர்களில் பதக்கங்களை வெல்லும் வகையில் அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்கு தற்போது ஒரு பெரிய ஊக்கம் கிடைத்து வருகிறது. இந்தத் துறையின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சர்வதேச டென்னிஸ் தொடரை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். விஜய் அமிர்தராஜ் அவர்கள் முதலமைச்சரை சந்தித்தபோது, முதலமைச்சர் தனக்கும் டென்னிஸ் மிகவும் பிடிக்கும் என்றும், இந்த நிகழ்வு நமது மாநிலத்திற்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.


தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்படுவதில் SDAT சார்பாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நுங்கம்பாக்கத்தில் உள்ள நமது டென்னிஸ் மைதானம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்படும். தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளும் உடனடியாக செய்து தரப்படும்.

விளையாட்டிற்கு எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஆதரவளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை இங்கு கொண்டு வந்த சங்கத்தின் ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் ஆண்களுக்கான ATP டென்னிஸ் தொடரையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் துறையின் அந்த கனவுக்கு TNTA ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன். டென்னிஸ் மட்டுமின்றி, இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அவற்றை ஒவ்வொன்றாக விரைவில் அறிவிப்போம் என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர்  விஜய் அமிர்தராஜ்,

தரவரிசையில் முதல் 50 இடங்களில் உள்ள 2 முதல் 4 வீராங்கனைகளை அழைத்து வர முயற்சிகள் நடக்கின்றன. அவர்களின் கட்டண எதிர்பார்ப்பும் நமது பட்ஜெட்டும் ஒத்துப்போக வேண்டும். மேலும், அவர்கள் இங்கு சில விளம்பர நிகழ்வுகளிலும் பங்கேற்க வேண்டும்.


இது கடினத் தரை என்பதால், மழை பெய்தாலும் மைதானத்தை எளிதாக உலர வைக்க முடியும். போட்டிகளைத் திட்டமிட்டபடி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
மின்னணு கோடு கண்காணிப்பு முறை - இந்தத் தொழில்நுட்பம் தற்போது அனைத்து மைதானங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக செலவு ஆகும் என்றாலும், இதை அமைத்தாக வேண்டும்.

இந்தத் தொழில்நுட்பத்தால் கோடு பார்க்கும் நடுவர்களுக்கு அந்த வேலை போனாலும், அவர்கள் அனைவரும் வீராங்கனைகளுக்கு உதவும் மாற்றுப் பணிகளிலும், மேற்பார்வையாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுவார்கள் என பேசினார்.

Related Link
600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி

600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிந்து நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved