Also Watch
Read this
By: Manigandan Raja

முகவரி கேட்பது போல் நடித்து செயின் பறிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், 75 வயது மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைத்தடி உதவியுடன் நடந்து சென்ற மூதாட்டியை, நம்பர் பிளேட் இல்லாத ஆக்டிவாவில் வந்த நபர் முகவரி கேட்பது போல் நடித்து, திடீரென கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்றார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
எதிர் எதிர் திசையில் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் எதிர் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. எதிர் எதிர் திசையில் சென்ற லாரியும், அரசு பேருந்தும் உரசிக் கொண்ட நிலையில் பக்கவாட்டில் மற்றும் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. அவ்விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவன்
கேரள மாநிலம் கொச்சி அருகே ஓடும் பேருந்தில் இருந்து பள்ளி மாணவன் சாலையில் விழுந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
வில்லிங்டன் ஐலாண்ட் பகுதியை சேர்ந்த மாணவன், தனியார் பேருந்தில் பள்ளிக்கு சென்றபோது, பேருந்தின் படிக்கட்டு கதவு மூடப்படாததால் தவறி கீழே விழுந்தான். மாணவன் கீழே விழுந்ததுகூட தெரியாமல் பேருந்து நிற்காமல் சென்ற நிலையில், அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved