Also Watch
Read this
By: Manigandan Raja

எனது கஷ்டங்களில் துணை நிற்பவர் துல்கர் சல்மான்
தனது கஷ்டங்களில் துணை நிற்பவர் துல்கர் சல்மான் என நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனது கஷ்ட காலங்களில் எப்போதும் துல்கர் பக்கபலமாக இருந்ததாகவும், தாம் மன ரீதியான குழப்பத்திலோ அல்லது சோர்வாக இருந்தாலோ துல்கர் சல்மானிடமிருந்து குறுஞ்செய்தி வந்துவிடும் எனவும் கூறினார்.
மேலும், துல்கரிடம் சிறிது நேரம் பேசினாலே மனம் இலகுவாகிவிடும் எனவும், இக்கட்டான நேரங்களில் அவர் ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த துருவ் விக்ரம்
தம் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடிப்பு தொழிலை தாம் ஏற்றுக்கொண்டபோதே விமர்சனங்களும் கண்காணிப்பும் இருக்கும் என்பதை புரிந்துகொண்டதாக தெரிவித்தார்.

மேலும், அது தன்னை பாதிக்கவில்லை என்று சொல்ல முடியாது எனவும், நீங்கள் உண்மையுடன் இருக்கும்போது, உங்களை நிலைநிறுத்துவது எது என்பதை நீங்கள் அறிந்திருக்கும்போது, அந்த விமர்சனங்களும் கண்காணிப்பும் கடந்து போய்விடும் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved