Also Watch
Read this
By: Manigandan Raja

அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 20% "கட்": அசாம் அரசு அதிரடி
முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்தால் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பிடித்தம் செய்யப்படும் அந்த தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பலதார திருமணமுறையை தடை செய்யும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: தேர்வுகளை ரத்து செய்த அரசு
மாணவர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்தை தொடர்ந்து, முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமன தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டது.

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் 2014-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் வெளிமுகமை நிறுவனமான 'டி.எஸ்.ஆர். டேட்டா பிராசஸிங் பிரைவேட் லிமிடெட்' ஆகியவற்றால் நடத்தப்பட்ட தேர்வுகள் அடங்கும் என தெரிவித்துள்ளது.
ஹிமாச்சலில் பருவமழை தீவிரத்தால் 197 பேர் பலி
ஹிமாச்சலில் பருவமழை தீவிரம் காரணமாக 197 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி முதல் பருவமழை பெய்து வரும் நிலையில், மழை சார்ந்த பேரிடர்களில் 81 பேரும், சாலை விபத்துகளில் 116 பேரும் பலியாகி உள்ளனர். மேலும், கனமழையால் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved