Also Watch
Read this
By: Manigandan Raja

பூனை ஒன்றை அதிகாரியாக நியமித்த மெட்ரோ நிறுவனம்
மும்பையில் குண்டவ்லி மெட்ரோ நிலையத்தில் பயணி ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அங்கு சுற்றித்திரிந்த பூனை ஒன்றை அதிகாரியாக நியமித்த மெட்ரோ நிறுவனம் “இதுதான் எங்கள் தலைமைப் பூனை அதிகாரி.
நிலைய ஆய்வுகள், பயணிகளைக் கண்காணித்தல் மற்றும் அனைவரும் ரசிக்கும்படியான இடத்தில் அமர்ந்திருப்பது ஆகியவை இதன் பொறுப்புகளில் அடங்கும்” என X பக்கத்தில் அந்நிறுவனம் பதிவு.
இதுதான் தாய் பாசம்
உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் அங்கிருந்த ஒரு நாய் குட்டியை விளையாட்டாக தனது மடியில் ஒளித்து வைத்துக்கொள்கிறார் குட்டியைத் தேடி அங்குமிங்கும் அலைந்த தாய் நாய், இறுதியாக பெண் காவலரிடம் இருப்பதை கண்டறிந்து அவரை சுற்றி சுற்றி வருகிறது; இந்த காணொலி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிதாபமான இளைஞர்கள்
இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை, கல்வி இல்லாமல் இருப்பதாக அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது நிதி ஆயோக் படித்து பட்டம் பெறுவதற்கும் சரியான வேலையைக் கண்டறிவதற்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக உள்ளதாக நிதி ஆயோக் தகவல்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved