Also Watch
Read this
By: Manigandan Raja

பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஆசிரியர் புகார்
மகாராஷ்டிராவில் அரசு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை முன்னேற்றுங்கள் என்ற பிரச்சாரத்தின் கீழ், லாதூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உருது பள்ளியை பார்வையிட சென்றார். இதையடுத்து, அவர் அத்துமீறி நுழைந்து, ஆசிரியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷ்யா பயணம்
இரண்டுநாள் பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷ்யா புறப்பட்டு செல்கிறார். அடுத்த மாதம் புதின் இந்தியா வரவுள்ள நிலையில், இந்த பயணத்தின் போது மேற்கொள்ள உள்ள ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் இருந்து புறப்பட்ட கப்பல் நடுக்கடலில் மூழ்கியது
பனாமா நாட்டு கொடியுடன் ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், 22 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இரும்பு தாது ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி சென்ற இந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 20 பேர், மியான்மரை சேர்ந்த 3 பேர், வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் என 24 ஊழியர்கள் இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved