Also Watch
Read this
By: Manigandan Raja

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் உள்ள நேதாஜி நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட சதுரங்க கூட்டமைப்பு இணைந்து 4 வது வருட மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை தூத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடத்தினர்.
நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக இந்த போட்டிகள் ஆனது இளம் தலைமுறையினர் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுத்து விளையாட்டு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என்பதால் இது போன்ற போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved