Also Watch
Read this
By: Manigandan Raja

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான இளையோர் திறன் கலைத் திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கப்பட்டது இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் முனைவர் ப்ரியா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலைத் திருவிழாவில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், கேலி சித்திரம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் ரங்கோலி, ஓவியம், களிமண் சிற்பம். மணல் சிற்பம், செதுக்குச் சிற்பம் காற்களி சோப்பு மெழுகு சுண்ணக்கட்டி போன்ற பிற பொருட்கள் நாட்டுப்புறப்பாடல் வில்லுப்பாட்டு செவ்வியல் இசை பம்பை உருமி உடுக்கை, பறை, மிருதங்கம் தபேலா தவில் கடம், டிரம்ஸ், நாதஸ்வரம்.

புல்லாங்குழல், ஹார்மோனியம். கீ போர்டு, வயலின், வீணை விசித்திர வீணை அல்லது கோட்டு வாத்தியம். நாட்டுப்புற நடனம் பரதநாட்டியம் பிறவகை நடனம் தனிநபர் நடிப்பு, பாவனை நடிப்பு . பலகுரல் பேச்சு குழு நாடகம், பொம்மலாட்டம் தோல்பாவை, மரப்பாவை. நிழற்பாவை உள்ளிட்ட கலைப் பிரிவுகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் போது பேசிய மாவட்ட ஆட்சியர் முனைவர் ப்ரியா
அச்சம் என்பது ஒரு இயல்பு தான் அதை உடைத்து மேல் ஏறி நிற்பது ஒரு வீரம் வெற்றி தோல்வி நிலையானது அல்ல ஆனால் நீங்கள் கொடுக்கும் முயற்சி மற்றும் பெரும் அனுபவமே நிலையானவை என மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசியதோடு அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொண்ட மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved