Also Watch
Read this
By: Manigandan Raja

கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல, தேசத்தை சிறப்பாக கட்டமைக்கும் முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒலிம்பிக்கில் அதிக போட்டிகளில் பங்கேற்கும் வகையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா அபாரம்
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 5-வது இடம் பிடித்தது. அரையிறுதிக்கான 2-வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியை 'டிரா' செய்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியா அபாரம்
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் வேலவன், வீர் சோட்ரானி ஆகியோர் முன்னேறி உள்ளனர். மலேசியாவின் ஈன் யோவ்வுக்கு எதிரான போட்டியில் வேலவன் செந்தில்குமார், 3-க்கு 0 என வென்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, 3-க்கு 1 என எகிப்தின் முகமது எல்ஷெர்பினியை வென்றார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved