Also Watch
Read this
By: Manigandan Raja

வேளாங்கண்ணி நடந்து செல்லும் வழியில் பள்ளி மாணவர்களின் பேருந்துப் பிரச்சனைக்கு வழியிலேயே நின்று நிதி அமைச்சர் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் இணைந்து அமைச்சர்கள் உடனடி தீர்வு கண்டனர்!
சீர்காழி தாலுகா, காரைமேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் அவதிப்பட்ட பள்ளி மாணவர்களின் குறைகளை அமைச்சர்கள் நேரில் கேட்டறிந்தனர். மனு எழுதிக்கொடுக்கச் சொல்லி காலம்தாழ்த்தாமல், அக்கணமே போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு வீடியோ கால் செய்து மாணவர்களின் பிரச்சனையை அமைச்சர்கள் நேரடியாகத் தீர்த்து வைத்தனர்.

காரைமேடு பேருந்து நிலையத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் மாணவர்களுக்காக நின்று செல்ல வேண்டுமெனவும், அதிகாரிகள் நேரில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக உத்தரவு பெறப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved