Also Watch
Read this
By: Manigandan Raja

உலக அளவில் கேலி கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் அரசு
உலக நாடுகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் குழு புகைப்படத்தில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை பாகிஸ்தான் வெட்டி நீக்கியது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமரை மட்டும் ஹைலைட் செய்து வெளியிடப்பட்ட புகைப்படத்தை பார்த்த பிரதமர் மோடி, எடிட் செய்யப்படாத அசல் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த படம் வெளியானதும், பாகிஸ்தான் அரசு உலக அளவில் கேலி கிண்டலுக்கு ஆளானது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவசர அவசரமாக அசல் புகைப்படத்தை வெளியிட்டு பல்டி அடித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிகளை தொடர்ந்து, அந்நாட்டின் மீதான தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளது.

இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தாக்குதலை தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் ஈரான் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தாக்குதலை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
கிர்கிஸ்தானில் நடைபெற்றஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் குழு புகைப்படத்தில், பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் இடம்பெறாத வகையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் புகைப்படத்தை crop செய்து வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் அலுவலகம் முழு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்த நிலையில், பாகிஸ்தானின் இச்செயலுக்கு கண்டனம் வலுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved