Also Watch
Read this
By: Manigandan Raja

வெண்ணெய் தடவிய இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி அசத்தல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார்நகரில் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இந்த கோயிலில் ஆண்டு தோறும் கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு உறியடி திருவிழாவும், வழுக்கு மரம் ஏறுதல் நடைபெறும், இந்த ஆண்டிற்கான உறியடி திருவிழா இன்று மாலை கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து கோவில் வளாகத்தை சுற்றிவந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தது, தொடர்ந்து உறியடி திருவிழா நடைபெறும் இடத்திற்கு சுவாமியை சுமந்துவந்து சுவாமி முன்பு உறியடி திருவிழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வெண்ணை தடவப்பட்ட இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி வாக்கு மரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள முறுக்கு, பொறி உள்ளிட்ட தின்பண்டங்களை எடுத்து சுற்றி நின்றவர்களுக்கு தூக்கி வீசப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved