Also Watch
Read this
By: Manigandan Raja

மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு
குழந்தை திருமணம் செய்பவர்கள் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதோடு, அவருக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளும் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி சிறு வயது திருமணங்களை நடத்தி வைக்கும் மதகுருக்கள் உள்ளிட்டோருக்கும் சட்டப்படி சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த பிக்கப் வாகனம்
உத்தரப் பிரதேசத்தில் சாலை தடுப்பில் மோதி பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தானின் பாகத் தலாக் பகுதியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் புடான் நோக்கி 32 பயணிகளுடன் சென்ற பிக்கப் வாகனம், கிழக்கு பெறிபல் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கெக்ரா பகுதியில் விபத்தில் சிக்கியது.

7 பேரை பலிகொண்ட கட்டட உரிமையாளர் கைது
டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்டட உரிமையாளரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல மாநகராட்சி அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் கைதான உரிமையாளர் ஹரிராம் குப்தாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved