Also Watch
Read this
By: Manigandan Raja

புகைப்படங்களால் நிரம்பிய அறிவிப்பு சுவர்
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் அடங்கிய அறிவிப்புச் சுவர் நிரம்பியுள்ளது. மீட்புக் குழுவினர் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து வரும் நிலையில், மாயமானவர்களின் உறவினர்கள், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையின் சுவரில் தங்களது உறவுகள் குறித்த அறிவிப்புகளை ஒட்டி வருகின்றனர்.
அமெரிக்கப் படைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்
அமெரிக்கப் படைகளை குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜோர்டான் வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன. 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகள் தடுக்கப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved