Also Watch
Read this
By: Manigandan Raja

கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த யானைகள்
கர்நாடகா மாநிலம் அசனூர் அருகே கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம் கரும்புகளை சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையின் நடுவே யானைகள் நின்றதால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது.
சாலையோர சுவற்றில் அமர்ந்திருந்த சிறுத்தை
திருப்பதி மாவட்டம் ராபூர் அருகே, சாலையோர சுவற்றில் சிறுத்தை அமர்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிட்வேலி-ராபூர் காட் சாலையில், வாகன ஓட்டிகளுக்கு அருகிலேயே சிறுத்தை தென்பட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தைகள் உலா வருவதால், இரவு நேரப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved