Also Watch
Read this
By: Manigandan Raja

மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகையே உலுக்கிய நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1385ஆக அதிகரித்துள்ளது. ரசுவா, நுவாகோட், கோர்கா, சிட்வான் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளத்தில் காணாமல் போன 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நிலை என்னவென்றே தெரியாததால் இரவு, பகலாக மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதனின் மையம் குளிர்ந்து சுருங்குவதால் மாற்றம்
சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோள், விஞ்ஞானிகள் முன்பு கணித்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக சுருங்கியிருக்கலாம் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புதனின் மிகப்பெரிய இரும்பு மையப்பகுதி குளிர்ந்து சுருங்குவதால் அதன் மேற்பரப்பும் சுருங்கி வருவதாகவும், அதிகபட்சமாக இதன் விட்டம் 23 கிலோமீட்டர் வரை குறைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில், பெபிகொலம்போ (BepiColombo) விண்கலம் நவம்பரில் புதனைச் சுற்றி ஆய்வு செய்ய உள்ளது.
திபெத்தில் 2ஆவது முறையாக உணரப்பட்ட நில அதிர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு திபெத்தில் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. தரைமட்டத்திலிருந்து 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி திபெத்தில் ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அண்டை நாடான நேபாளத்தின் எல்லைப்பகுதிகளிலும் உணரப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved