Also Watch
Read this
By: Manigandan Raja

ஜெட்டா, தாயிஃப் நகரங்களுக்கு சவுதி அரேபியா அவசர எச்சரிக்கை
வரலாற்றில் முதல்முறையாக சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவுக்கு திடீரென வான்வழி தாக்குதல் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, ஜெட்டா மற்றும் தாயிஃப் நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் புனித பயணிகள் உடனே கட்டடங்களுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், சில நிமிடங்களிலேயே இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
700 அடி உயர மலையில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற வீரர்
கலிபோர்னியாவில் 700 அடி உயர செங்குத்தான மலையில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற வீரரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியரா நெவாடா மலைத்தொடரில் உள்ள கோர்ட்ரைட் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள "பவர் டோம்" என்ற 700 அடி உயரமுள்ள செங்குத்தான கிரானைட் பாறையில் ஏறிய நபர், நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். அவரால் சுயமாக மேலே ஏறவோ கீழே இறங்கவோ முடியவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved