news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

100 விழுக்காடு வரி - இந்தியா எச்சரிக்கை, அமெரிக்க உறவில் விரிசல்?

கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க வாஷிங்டன் தயாராகி வருகிறது. இது, இந்திய–அமெரிக்க உறவில் புதிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சிக்கலை உருவாக்கி உள்ளது.

வாங்குவதா, வேண்டாமா?
ரஷ்யாவுடனான எரிசக்தி உறவை எந்த அளவுக்கு தொடர்வது? எந்த நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது? அமெரிக்காவுடன் எந்த அளவுக்கு வர்த்தக சமரசம் செய்வது? உலக சந்தை அதிர்ச்சிகளிலிருந்து இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது? என்ற வினாக்கள் எழுகின்றன. எனவே, இந்தியா முன் இருக்கும் கேள்வி “ரஷ்ய எண்ணெயை வாங்குவதா, வேண்டாமா?” என்பதைக் காட்டிலும் சிக்கலானது.

அமெரிக்காவின் கணக்கு என்ன?
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழுமையான போரைத் தொடங்கிய பின்னர், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவை குறிவைத்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் ரஷ்ய கச்சா எண்ணெய் உலக சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவும் சீனாவும் பெருமளவில் வாங்குகின்றன. கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியா, கடந்த ஜூலையில் வாங்கிய கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கு சுமார் 51 சதவீதத்தை எட்டியது.

இந்தியா என்ன செய்யும்?
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் செப்டம்பர் 16 அன்று நிறைவேற்றிய சட்டம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் குறிப்பிட்ட நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபர் டிரம்புக்கு வழங்குகிறது. 100 சதவீதம் என்பது அதிகபட்ச அதிகார வரம்பு. நடைமுறையில் எந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியப் பொருட்களுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அதிகரிக்கக் கூடும்.

கடுமையாக பாதிக்கும்
ஆனால், 100 சதவீத வரி விதித்தால், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் போட்டி போட முடியாது. அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. 2026 ஏப்ரல்–ஆகஸ்ட் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 42.79 பில்லியன் டாலராக இருந்தது; முந்தைய ஆண்டின் இதே காலத்தில் அது 40.39 பில்லியன் டாலராக இருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. எனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான தண்டனை நடவடிக்கை, மறைமுகமாக இந்தியாவின் ஏற்றுமதி துறைகளை கடுமையாக பாதிக்கும்.

பல்வேறு வழிகள்...
தற்போதைய சூழலில், இந்தியாவுக்கு பல்வேறு பேச்சுவார்த்தை வழிகள் உள்ளன. முதலாவது, ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் சரக்குகளுக்கு கால அவகாசம் கோருவது. இரண்டாவது, குறிப்பிட்ட அளவு ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு விலக்கு அல்லது quota போன்ற ஏற்பாட்டை பேச்சுவார்த்தை மூலம் பெற முயற்சிப்பது. மூன்றாவது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எரிசக்தி இறக்குமதியை ஒரு பகுதியாக இணைப்பது. நான்காவது, ரஷ்யாவைத் தவிர மற்ற விநியோகஸ்தர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் திறனை மேலும் அதிகரிப்பது. இவை ஒவ்வொன்றுக்கும் சாதக - பாதகங்கள் உள்ளன. சந்தை விலை, அமெரிக்க சட்டத்தின் நடைமுறை விதிகள், இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோக நிலை ஆகியவற்றைப் பொறுத்தே இந்தியாவின் இறுதி அணுகுமுறை இருக்கும்.

கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா
மேற்கத்திய தடைகள் காரணமாக ரஷ்யாவின் பாரம்பரிய ஐரோப்பிய சந்தை சுருங்கிய நிலையில், ஆசிய சந்தைகள் ரஷ்ய எண்ணெய்க்கு முக்கியமானதாக மாறியுள்ளன. இந்தியாவும் சீனாவும் மிகப்பெரும் அளவில் வாங்கும் நிலையில், கொள்முதல் அளவு குறைந்தால் ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். எனவே ரஷ்ய தரப்பும் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறது. புதிய அமெரிக்க தடைகள் அமல்படுத்தப்பட்டால் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் அது சிக்கலாக்கும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு இந்தியா எச்சரிக்கை
இந்தியாவைப் பொறுத்தவரை இது வெறும் கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரம் அல்ல. எரிசக்திப் பாதுகாப்பு, அமெரிக்காவுடனான வர்த்தகம், ரஷ்யாவுடனான நீண்டகால உறவு, உக்ரைன் போர், உலக எண்ணெய் சந்தை மற்றும் இந்தியாவின் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை ஆகிய அனைத்தும் ஒரே புள்ளியில் சந்திக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை இருதரப்பு உறவை பாதிக்கக்கூடும் என்பதை வாஷிங்டனிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. அதேசமயம், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதிலும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் இந்தியா தெரிவித்து உள்ளது. இதுவே அடுத்த கட்ட இந்திய வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கையின் திசையை நிர்ணயிக்கும்.

Related Link
மக்காவை நெருங்கிய தாக்குதல், ஈரான் போரின் எதிர்பாராத ஆபத்து

மக்காவை நெருங்கிய தாக்குதல், ஈரான் போரின் எதிர்பாராத ஆபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கமலாலயத்தில் வெடித்த பாலியல் புகார், அதிரடி ஆக்சன்

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved