Also Watch
Read this
By: Manigandan Raja

சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர் :
பரமக்குடியில் சூறாவளி காற்றால் சிறிய அளவிலான செல்போன் டவர் மற்றொரு செல்போன் டவர் மீது சரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று மாலை திடீரென
சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது, திடீரென வீசிய சூறாவளி காற்றால் ரயில் தண்டவாளத்தில் உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அதேபோல் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே ஒரு வணிக வளாக கட்டிடத்தின் மீது இருந்த சிறிய அளவிலான செல்போன் அவர் அருகில் இருந்த மற்றொரு செல்போன் டவர் மீது சரிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக இதில் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படவில்லை. செல்போன் டவறுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரிந்த செல்போன் டவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved