Also Watch
Read this
By: Fyrose Banu

கோத்தகிரியில் கடந்த ஒரு மாதமாக வீட்டை உடைத்த ஒற்றை பெரிய கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரங்களில் உலாவரும் கரடி கிராம மக்களை யாரையாவது தாக்குவதற்கு முன் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்த கரடி
கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தில் சமீப காலமாக கரடி, காட்டெருமை, சிறுத்தை என பல்வேறு வனவிலங்குகள் கிராமத்தில் உலா வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே கொணவக்கரை கிராமத்தில் ருக்மணி என்கிற 53 வயது மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கு வைத்திருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் சூறையாடி உள்ளது.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
அப்போது வீட்டில் ருக்மணி இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வனத்துறையிடம் பலமுறை பொதுமக்கள் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குமுறும் அப்பகுதி மக்கள் தற்போது உடனடியாக கரடியை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved