Also Watch
Read this
By: Manigandan Raja

வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்ததால் பரபரப்பு :
திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள செயல்படாத பாறைக்குழியில் கொட்டப்பட்டதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு
ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் இதுவரை கொட்டப்பட்ட குப்பைகள் எடுக்கப்படாமல் உள்ளதை கண்டித்து திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேயர்
தினேஷ்குமாரை வீழ்த்துவோம் என முதலிபாளையம் பொதுமக்கள் 200 வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்து.
இன்று 200க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு வாங்க மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு. அனைவரையும் தடுத்த போலீசார் 5 ஐந்து பேராக உள்ளே அனுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்று வருவதாகவும்.
பொதுமக்கள் இதற்கான ஆவணங்களை தயார் செய்து வருவதாகவும் தங்களது பகுதியில் உள்ள 10,000 மேற்பட்ட வாக்குகள் தேவையில்லை என கூறி தங்களை புறக்கணித்த திமுக மேயர் தினேஷ்குமாரை வீழ்த்துவோம் வகையில் இந்த வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் தங்கள் பகுதிக்கு நிரந்தர தீர்வை இதன் மூலம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved