திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை பூண்டி கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் விளை நிலத்தை மண் மூழ்கடித்து, அறுவடைக்கு தயாராகவிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளை பூண்டுகள் சேதமானது. அணையிலிருந்து வரும் வாய்க்காலில் நீர் கசிவு ஏற்பட்டு கரையில் மண் சரிந்து இன்பராஜ் என்பவரின் விளைநிலத்தை மண் மூழ்கடித்தது. இந்நிலையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் இதே கிராமம் அருகேவுள்ள கிளாவரை பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாய்க்காலை முறையாக பராமரிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.