Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 11:02 AM
By: Web Team

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே வீட்டின் முன் விளையாடிய சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தொல்லவிளை பகுதியை சேர்ந்த பிரவீனின் 10 வயது மகள் பிரமிக்பா வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்வீட்டை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட்(Sheperd) இன வளர்ப்பு நாய் சிறுமியை துரத்தி சென்று கடித்து குதறியது.
சிறுமியை உடனடியாக மீட்ட பெற்றோர், நாயின் உரிமையாளரிடம் தட்டிக் கேட்டபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நாயின் உரிமையாளர் காட்பிரோ மற்றும் அவரது மகன் மீது வழக்குபதிவு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved