Also Watch
Read this
By: Manigandan Raja

மின் மாற்றியில் திடீர் தீவிபத்து :
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே அரசு பொதுத்துறை வங்கி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று காலை வங்கி முன்பு உள்ள மின் மாற்றி பாக்ஸில் (உள்ளே அணில்
கூடு கட்டி குட்டிகள் இருந்தாக கூறப்படுகின்றது) ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டு.
மின் மாற்றி பாக்ஸில் இருந்து தீ மலமலவென்று கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமா மாறியுள்ளது. இதனால் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அருகில் இருந்த
பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்.
மின் ஊழியர் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு மின் மாற்றியில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட மின் மாற்றி அருகே சில அடி தூரத்தில் வங்கிக்கான பெரிய அளவிலான டீசல் ஜெனரேட்டர் இருந்த நிலையில் வங்கி மேலாளர்.
தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்சார வாரிய ஊழியர் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து உடனடியாக தடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved