Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி பகுதியில் இருந்து மதுரையை நோக்கி காற்றாலை இறகுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஓட்டப்பிடாரம் அருகே வாலசமுத்திரம் பகுதியில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தபோது, திடீரென லாரி ஆனது இடது பக்கத்தில் இருந்து வலது புறமாக திரும்பியதாக கூறப்படுகிறது.
இதனால் பின்னால் வந்த ஐந்து கார்கள் திடீரென பிரேக் போட்டதால் ஐந்து கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குளானது தொடர்ந்து டூ வீலரில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரூபன் என்பவரது இருசக்கர வாகன மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த வீரநாயக்கன் தட்டு பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து விற்கு தலையில் காயம் ஏற்பட்டது. கார்களில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்து காயமடைந்த சரவண முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்து மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved