Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 08:20 AM
By: Web Team
வரும் 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பணிகளை அதிமுகவினர் முடுக்கி விட்டுள்ளனர். 50 ஆண்டுகாலமாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நிலையில், அவர் நின்று வெற்றி பெற்ற தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved