Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 28 மாதங்களுக்கு பிறகு தான் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது அதேபோல நாங்களும் அனைத்து துறைகளும் வரிவிதிப்பை அதிகரித்துள்ளோம் அதன் மூலம் வரக்கூடிய வருவாயை கொண்டு ரூபாய் 2500 பணம் மகளிருக்கு உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிறேன் 29ஆம் தேதி கொடியேற்றம் ஏற்றப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடைபெறுமாக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் தமிழக அரசின் தவெகவை சேர்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் நடைபயணமாக சென்று கொண்டிருந்தார்
அப்பொழுது சீர்காழியில் அவர் செய்தியாளுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது
மக்கள் முதற்கட்டமாக தமிழகத்தில் லஞ்சம் அரசத்துறையில் அதிக அளவில் தவிர்க்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளதாகவும், சட்டசபையில் நேரடி காட்சிகளை ஒளிபரப்பு செய்வதை மக்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளி கல்வித்துறையில் கடந்த காலங்களில் லஞ்சம் பெற்று உரிமம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நான் சாட்சி ஆக உள்ளேன் என்றே தான் கூறியிருக்கிறேன் அது தவறாக புரிந்து வருவதாக கூறுகிறார்,தவெக தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 2500 மகளிருக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்குவதற்காக ஜிஎஸ்டி பத்திரப்பதிவு துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் மூலம் வரி விதிப்பை அதிகரித்துள்ளதாகவும் அதன் மூலம் வரக்கூடிய வருவாயை கொண்டு மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்கப்படும் மேலும் கடந்த திமுக
ஆட்சியில் ஆயிரம் ரூபாய் பணம் 28 மாதங்களுக்கு கழித்து தான் வழங்கப்பட்டது அதேபோல நாங்களும் தற்போது வழங்குவோம் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved