Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்வாகச் சார்பில் சரிவரக்கூடிய நீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று காக்கங்கரை பகுதி வழியாக தர்மபுரி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட காலி கூட குடங்களுடன் வந்துள்ளனர்.
இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் குடிநீர் பிரச்சினையை கூடிய விரைவில் முடித்து தருகிறேன் என கூறியதின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் செய்து பரபரப்பு காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved