Also Watch
Read this
By: Web Team

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரமடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற குலசேரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை செவ்வாயன்று, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதமிருந்து, பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கிராமம், கிராமமாக சென்று காணிக்கை பெற்று கோயிலில் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், திசையன்விளை பஜாரில் விற்பனைக்காக தசரா பொருட்கள் வந்து குவிந்துள்ளன. அம்மன் கிரீடம், காளி, விநாயகர், அனுமன், ராஜா, ராணி, குரங்கு, கரடி, புலி, சிங்கம் என பல்வேறு வகையான வேட பொருட்கள் தயாராக உள்ளன. திசையன்விளை பஜாரில் உள்ள கடைகளில் ரூ.50 முதல், ரூ.5 ஆயிரம் வரையிலும், பல வண்ண கலர்களிலும் விற்பனைக்கு பொருட்கள் வந்துள்ளன. வேடம் அணியும் பக்தர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை மும்முரமாக வாங்கி செல்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved