Also Watch
Read this
By: Fyrose Banu

ஈகை பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித இஃப்தார் ரமலான் நோன்பை திறப்பு நிகழ்ச்சியில் தவெகவினர் சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டது காண்பவரை நெகிழ செய்தது. 

இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக கட்சியின் சார்பில் இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை நகர செயலாளர் சஞ்சய் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட தவெகவினர்
இந்த நிகழ்ச்சிக்கு வாலாஜாபேட்டை 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினரும் தவெக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை விஜய் மோகன் தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் மகளிரணி பிற அணி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் இஸ்லாமிய சகோதரர்களுடன் அமர்ந்து கஞ்சி மற்றும் உணவை அருந்தி நோன்பைத் திறந்து சிறப்பு தொழுகை நடத்தி இறைவனை மனமுருகி வழிபட்டார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved