Also Watch
Read this
By: Fyrose Banu

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பருவமழை போதிய அளவில் இல்லாததால் கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழுவதுமாகவே வற்றிய நிலையில் கொடைக்கானலில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலை வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் செண்பகனூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

மேலும் மலைச் சாலைகளில் கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் வான ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு தங்களுடைய வாகனங்களை செலுத்தி வருகிறார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved