Also Watch
Read this
Posted on: Jul 01, 2025 02:03 AM
By: Web Team

மதுரை மாவட்ட சுகாதார அலுவலர், அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசுவதோடு, அடாவடியாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் எழுந்ததால்,
பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் நேரில் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து சில மருத்துவர்களுக்கு குமரகுருபரன் நோட்டீஸ் வழங்கவே, அதனை கண்டித்து மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved