Also Watch
Read this
By: Manigandan Raja

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2026-27 ஆண்டுடிற்கான நிழல் நிதி நிலை பட்ஜெட்டில் 68 ஆயிரம் கோடி ரூபாயை வேளாண் துறை மூலமும் பாசன திட்டங்களுக்காக நிர்வளத்துறை மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதம் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கு 10 சதவீத மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.