news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
tv

Also Watch

திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

CM Vijay

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை எழும்பூர் அடுத்துள்ள சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பயோ-சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இப்பணியில் ஈடுபட்டு வரும் Shrinivas Waste Management Services Private Limited நிறுவனத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 180 டன் காய்கறிக் கழிவுகள் மற்றும் மாட்டுச்சாணத்தை பயன்படுத்தி, தினசரி 4,000 மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை எரிவாயு நிலையத்திற்குள் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், சுமார் 30 நிமிடங்கள் இயற்கை எரிவாயு தயாரிப்பு பணிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தார்.முதலமைச்சரைக் காண்பதற்காகப் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லாமல், பள்ளிச்சிறுவர் சிறுமிகள் தங்களின் சீருடையுடனே கூட்டத்திற்கு இடையே ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.


ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டுச் சாலையில் நடந்து வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சாலையின் இருபுறங்களிலும் திரண்டு இருந்த பொதுமக்களுக்குத் தனது கைகளை அசைத்தவாறு நடந்தபடியே சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Link
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1,150 பேர் ராஜினாமா

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1,150 பேர் ராஜினாமா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved