Also Watch
Read this
Posted on: Feb 28, 2025 06:35 AM
By: Srini Vasan

தமிழ்நாட்டில் ரயில்வே திட்ட பணிகள் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும் எனவும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அம்ருத் திட்ட மேம்பாடு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு பட்ஜெட்டில் சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved