news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்
tv

Also Watch

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

சிவகங்கை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மக்கள் தீர்மானம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் புதிய கல்குவாரி அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.புதிய கிரசர்,கல்குவாரி மற்றும் ஏற்கனேவே இயங்கி வரும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி ஜெயங்கொண்டநிலை,வடவன்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட ஐந்து ஊர் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வடவன்பட்டி மயில்ராயன்கோட்டை நாட்டுக்கோயில் மந்தையில் 38 கிராம மக்கள் கூடி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நாட்டுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மயில்ராயன்கோட்டை நாடு என்ற மல்லாக்கோட்டை நாட்டை சுற்றி இயங்கி வரும் அனைத்து கிரசர், கல்குவாரிகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் கனிமவளத்திற்காக தோண்டக்கூடாத பகுதியாக அறிவிக்க கோரி அரசுக்கு கவனத்தை ஈர்க்கும் விதமாக வடவன்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 19 தேதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Link
பராமரிப்பின்றி மின்கம்பங்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

பராமரிப்பின்றி மின்கம்பங்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved